ரஜினியின் பிறந்த நாளன்று நடந்த துயர சம்பவம்.. யாருக்கும் தெரியாத ரகசியம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் நேற்று பிரமாண்டமாக கொண்டாடினார்கள். ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், 170 படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று நடந்த மோசமான சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் பேசுகையில், ஒரு காலகட்டத்தில் தனது பிறந்த நாள் ஆண்டு ரசிகர்களை சந்தித்து வந்தார். ஆனால் தற்போது அப்படி வருவதில்லை.
அதற்கு காரணம், 80ஸ் காலகட்டத்தில் தனது பிறந்த நாட்களில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அவரை சந்தித்துவிட்டு சென்ற மூன்று ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.
அவர்களின் தாயார் கேட்ட கேள்விகள் இன்னும் என் காதில் இருக்கிறது. இந்த காரணத்தால் தான் நான் பிறந்த நாட்களில் ரசிகர்களை சந்திப்பதில்லை என்று ரஜினி ஒரு நிகழ்ச்சியில் கூறியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.