மேடையில் ஆர்வக்கோளாறில் கதையை உளறிய ரஜினிகாந்த்.. பெரிய மனுஷன் பண்ற வேலையா இது
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார், உலக நாயகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் மற்றும் மணிரத்னத்தை பற்றி 10 நிமிடத்தில் பேசி முடித்துள்ளார் கமல் ஹாசன். ஆனால் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாவலை படிக்க ஆரம்பித்த எப்படி என்று கூறியிருந்தார்.
மேலும் அப்படியே பொன்னியின் செல்வன் கதையை 10 நிமிடத்திற்கும் மேல் கூறியுள்ளார். கதையை முழுதாக தெரியாதவர்கள் பலர் இருக்கையில் படத்தின் கதையை கூறியது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், பொன்னியின் செல்வம் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். ஆனால் மணிரத்னம் வேண்டாம் என்று சொல்லியதாகவும் தெரிவித்துள்ளார்.