15 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன்? ரம்பா பேச்சு
Rambha
By Yathrika
ரம்பா
நடிகை ரம்பா, 90 காலகட்டத்தில் ஒட்டுமொத்த இளசுகளின் மனதில் கனவுக் கன்னியாக வாழ்ந்தவர்.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஸ்புரி மற்றும் சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு மேலாக நடித்துள்ள இவர் 2010ம் ஆண்டு இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளார். திருமணம், குழந்தைகள் என ஆனதால் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் இப்போது மீண்டும் சினிமா பக்கம் வந்துள்ளார்.
ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருபவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஏன் சினிமாவில் இருந்து விலகி இருக்கிறேன் என பேசியுள்ளார். குழந்தைகள் கொஞ்சம் வளரும் வரை அவர்களுடன் இருக்க வேண்டும் என விரும்பிதால் விலகி இருந்ததாக கூறியுள்ளார்.