ஒரே ஒரு படத்தால் நடிகை ரம்பா வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு.. இப்படியொரு சோகமா
வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாத்துறைக்கு காலெடி எடுத்து வைத்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து டாப் கதாநாயகியாக ஜொலித்தவர் நடிகை ரம்பா. சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி கணவர், குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். தற்போது மீண்டும் இந்தியா பக்கம் வந்து கணவர் ஆரம்பித்த தொழிலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரம்பா குறித்து சில தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு தயாரிப்பாளர்களாக வேண்டும் என்ற ஆசைகள் வருவதுண்டு. அது நல்லமுறையில் நடக்குமா? என்பது பலமுறை யோசித்து களத்தில் இறங்கவேண்டும்.
ஏற்கனவே இவரை போல் தான் நடிகையர் திலகம் சாவித்ரியும் பட தயாரிப்பில் ஈடுபட்டு மோசமான நஷ்டத்தை சந்தித்தார். அதேபோல் தான் நடிகை ரம்பாவும் தயாரிப்பில் ஈடுபட்டு அதிகளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் த்ரீ ரோசஸ் படத்தை தயாரித்தார். ஆனால், இப்படம் போதிய வரவேற்பு பெறாமல் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது.
இந்த கடனை அடைப்பதற்காக சென்னை மவுண்ட் ரோடில் இருக்கும் தனது வீட்டை விற்றுள்ளார் ரம்பா. அதோடு சினிமா பக்கமே வருவதை நிறுத்திவிட்டார். 2011 பிலிம் ஸ்டார் படத்தோடு சினிமாவை விட்டே விலகி கணவருடன் செட்டிலாகிவிட்டார் என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த தகவலை யூடியூப் சேனல் ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்ததை, விடுப்பு தளத்தில் பதிவிட்டுள்ளோம். இதற்கு விடுப்பு தளத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை.