அந்த வயதில் நான் காதலித்தது உண்மை தான்.. கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்கள்..பிக்பாஸ் நடிகை
தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அப்படம் விருது வாங்கியப்பின் சில காலம் வாய்ப்பில்லாமல் இருந்தார். இதையடுத்து மொட்டைமாடி போட்டோஷுட் எடுத்து டிரெண்ட்டாகினார். பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்கபோவது யார், குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டாப் 5 இடத்தை பிடித்தார்.
இதன்மூலம் பல படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டியளித்த ரம்யா பாண்டியன், பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் காதலித்து இருக்கிறீர்களா எத்தனை முறை என தொகுப்பாளர் கேட்க சிரித்து கொண்டே பதிலளித்த ரம்யா, 11, 12 படிக்கும் போது ஒருவனை காதலித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பின் யாரையும் காதலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் மது குடித்து இருத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, குடிக்கும் க்ரூப்பில் குடிக்காதவரை கம்பல் பண்ணி குடிக்க வைப்பார்கள். அதுபோல என்னை குடிக்க வைத்தார்கள். நல்லாவே இல்லை என்று கூறியுள்ளார்.