கணவர் என்னைவிட்டு போக இதுதான் காரணம்..நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. ரஞ்சிதா கதறல்..

Ranjitha Gossip Today Nithyananda Tamil Actress
By Edward Oct 15, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

நடிகை ரஞ்சிதா

90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து சத்யராஜ், அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார் நடிகை ரஞ்சிதா. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய ரஞ்சிதா 2010ல் வெளியான ராவணன் படத்தில் குணச்சித்திர ரோலில் நடித்திருந்தார்.

கணவர் என்னைவிட்டு போக இதுதான் காரணம்..நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. ரஞ்சிதா கதறல்.. | Ranjitha Talks About Nithyanandha And Husband

திருமணமான ரஞ்சிதா, 2010 நித்தியானந்தாவுடன் தனியறையில் நெருக்கமாக இருந்ததாக கூறி வீடியோ இணையத்தில் லீக்காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நித்தியானந்தா ஆசரமத்திலேயே முக்கிய பங்கினை ஆற்றி வருகிறார்.

வீடியோ பிரச்சனை

சமீபத்தில் அவரளித்த பேட்டியில் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். எனது மரியாதையை மீடியாக்கள் தான் சேர்ந்து துகிலுரித்தார்கள். நான் பெரிய பணக்கார வீட்டு பெண் எல்லாம் இல்லை.

கணவர் என்னைவிட்டு போக இதுதான் காரணம்..நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. ரஞ்சிதா கதறல்.. | Ranjitha Talks About Nithyanandha And Husband

என் அப்பா தொழிலதிபரும் இல்லை, ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக என்னால் அந்த சம்பவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை.

அதுகுறித்து நடந்த வழக்கில் கூட என் அப்பாவால் என்னை காப்பாற்ற முடியவில்லை. இந்தப்பிரச்சனையை நினைத்து தற்கொலை எண்ணத்துக்கு சென்றேன். பின் என்னை விட்டால் குடும்பத்தை பார்க்க ஆளில்லை என்பதால் அதிலிருந்து வெளியே வந்தேன்.

கணவரின் பிரிவு

நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு என்றால் நான் ஷூட்டிங்கிலும் புத்தகமும் கையுமாக இருப்பேன். அந்த புத்தகங்கள்தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது. இருந்தாலும் அந்தக்கசப்பான அனுபவம் தந்த வலி தீராதது. என் கணவரும் அதனால் என்னைவிட்டு பிரிந்துவிட்டார்.

கணவர் என்னைவிட்டு போக இதுதான் காரணம்..நித்தியானந்தாவுடன் தான் இருப்பேன்.. ரஞ்சிதா கதறல்.. | Ranjitha Talks About Nithyanandha And Husband

எனக்கு நடந்த விஷயங்களை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அனைத்திற்கும் எல்லை இருக்கிறது. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். என் இளமை காலத்தில் இருந்தே கடவுள், ஆன்மீகம் மீது நிறைய பற்று வைத்திருப்பவள். அதை இன்றுவரை கடைப்பிடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கலாம்.

ஆனால் நான் இன்றும் நித்தியானந்தாவின் சீடர்தான், இப்போது அவருடனேயேதான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன், ஆன்மீக வழீல் செயல்படுவேன் என்று ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.