சாய் பல்லவியால் மேடையில் அசிங்கப்பட்ட ராஷ்மிகா! வைரல் வீடியோ..
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் தமிழ் டீச்சராக நடித்து அறிமுகமாகியவர் நடிகை சாய் பல்லவி. டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று அதன்பின் நடிகையாக அவதாரம் எடுத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி சமீபத்தில் Adavallu Meeku Joharlu படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு நடிகர் ராணா டக்குபட்ட்டி, நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா போன்ற நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். சாய் பல்லவி பேச முன்வந்த போது ரசிகர்கள் விடாட்து சாய்பல்லவி பெயரை கூப்பிட்டு கொண்டே ஆரவாரம் செய்தனர்.
ஆனால் அதன்பின் வந்து பேசிய ராஷ்மிகா மந்தனாவை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் ரசிகர்கள். இதை கிண்டல் செய்யும் வண்ணம் ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.