திருமணமாகி ஒரு வருஷத்தில் பிரிவா!! மகாலட்சுமியுடன் ஏற்பட்ட சண்டை பற்றி கூறிய ரவீந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக பல சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை இரு ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த மகாலட்சுமி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திடீர் திருமணம் பலரை அதிர்ச்சியாக்கியதோடு பெரியளவில் டிரெண்டிங் ஆனது. அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் திருமண வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருணத்திற்கு பின் இருவரும் ஜோடியாக அவுட்டிங் செல்வது, டின்னர், கோவில் என்றும் ரொமான்ஸ் செய்வதுமாக இருந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இப்படி சென்றிருக்கையில், ரவீந்தர் தனியாக நின்றுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனென்றால் அவர்கள் உங்களின் வருத்தங்களில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அப்படி ரவீந்தர் கூறியது இணையத்தில் பரவி இருக்கும் சண்டையா? பிரிகிறார்களா என்ற கேள்வி எழுந்து வந்தது. மேலும் தன் அம்மாவுக்குள் சில பிரச்சனை வந்தாலும் அதை சகித்துக்கொள்வார் மகாலட்சுமி.
ஆனால் மஹா ரொம்பவும் பொஸசிவ் குணம். அவளுடைய தோழிகள் என்னுடைம் பேசினால் கூட கோபடுப்படுவாள். அந்த ஒரேவொரு விசயம் மட்டும் தான் சண்டையே தவிர மற்ற சண்டைகள் அப்படி வந்து இப்படி போய்விடும் என்று ரவீந்தர் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.