ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்திற்கு காரணமே அவர் தானா?... குடும்பத்திலேயே வெடித்த பிரச்சனை
ஜெயம் ரவி
தமிழ் சினிமா பிரபலங்களில் கியூட் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்கள் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி. இருவரும் சேர்ந்து எப்போது புகைப்படம் வெளியிட்டாலும் உடனே ரசிகர்களால் வைரலாக்கப்படும்.
அந்த புகைப்படத்திற்கும் அதிக லைக்ஸ் குவியும். ஆனால் இனி அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக வரப்போவதில்லை, காரணம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். ஜெயம் ரவி ஒரு அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இவர்களின் விவாகரத்திற்கு காரணம் ஜெயம் ரவி மாமியாரின் வளர்ப்பு மகன் என்று கூறப்படுகிறது.
ஜெயம் ரவியை வைத்து அவரது மாமியார் சுஜாதா ஒரு படம் தயாரிக்க அவரது வளர்ப்பு மகன் சொல்வதையும் கேட்க வேண்டும் என ஆர்டர் போட்டுள்ளார். அது ஜெயம் ரவிக்கு சுத்தமாக பிடிக்காமல் போல அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சண்டை பெரிதாகி மனைவியுடன் ஈகோ பிரச்சனையும் வந்திருக்கிறது.
பிரச்சனை பெரிதாக இருவரும் பிரிய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.