சின்ன பிரச்சனையில் தொடங்கி.. விஜே பிரியங்கா கணவரை பிரிய காரணம் இதுதானா..?
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் விஜே பிரியங்கா டெஸ்பாண்டே. தன்னுடைய தனித்துவமான காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் நிகழ்ச்சியை எடுத்து செல்லும் குணம் கொண்டவர்.
சில ஆண்டுகளுக்கு முன் டெக்னீஷியன் பணியாற்றிய பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் புராணம் பாடி வந்த பிரியங்கா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. கணவரை பிரியங்கா விட்டு பிரிய காரணம் என்ன என்று பயில்வான் சமீபத்தில் பேசியுள்ளார்.
நன்றாக இருவரும் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த போது, நாட்கள் செல்ல செல்ல பிரியங்கா, அவரது துறையில் நல்ல வளர்ச்சி பெற்று இருந்தார். அதனாலேயே இருக்கும் பிரச்சனை ஏற்பட தொடங்கி கருத்து வேறுபாடுகளும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்கிறது.
சின்ன பிரச்சனையாக இருந்த போது பிரியங்கா அவரது அம்மா வீட்டில் தங்கியதால் பெரிய விசயமாக மாறி, பிரவீன் பிரியங்காவிடம் பேசுவதையே தவிர்த்து இருக்கிறார். பிரவீன் தன் மீது கோபம் குறைவதற்கு தான் பிரியங்கா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
அங்கு கூட அம்மாவை பற்றி பேசினாரே தவிர, கணவர் பிரவீன் பற்றி வாய்த்திறக்கவில்லை. ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரவீன் வேலை செய்து கொண்டிருந்ததால் தான் அவர் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கண்டீசன் போட்டதால் பிரியங்கா பேசாமல் இருந்திருக்கிறார் என்று பயில்வான் தெரிவித்திருக்கிறார்.
பிரியங்கா சேர்ந்து வாழ சம்மதித்தாலும் பிரவீன் சேர்ந்து வாழ்வதற்கு சம்மதிக்காமல் இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார் பயில்வான்.