வேறுவழியே இல்லாமல் இரண்டாம் தாராமான வரலட்சுமி!! பின்னணி காரணமே இதுதானாம்..
பிரபல நடிகர் சரத் குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நேற்று அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து, காந்தராஜ் அளித்த பேட்டியில், வரலட்சுமி மட்டுமல்ல, சாவித்திரி, வைஜெயந்தி மாலா, ஹேமா மாலினி, ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் கூட இரண்டாம் தாராமாகத்தான் சென்றார்கள். சாவித்திரியின் வரலாறு அனைவருக்கும் தெரிந்தது தான். வைஜெயந்தி மாலா பாலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார்.
ஹேமமாலினி தர்மேந்திரவை இரண்டாம் திருமணம் செய்தார். ஏற்கனவே மகன்கள் இருக்கும் நிலையில் ஹேமமாலினியையும் தர்மேந்திராவின் மகன்களையும் சேர்த்து பார்த்தால் அக்கா, தம்பி என்று கூட சொல்வார்கள், அப்படி ஹேமமாலினிக்கு இணையான வயதில் இருந்தார்கள். ஸ்ரீதேவி கூட இப்படியொரு வாழ்க்கை அவருக்கு அமையும் என்று யாரும் நினைக்கவில்லை.
இப்போது அந்த வரிசையில் வரலட்சுமியும் இரண்டாம் தாரமாகத்தான் நிக்கோலை கரம் பிடிக்கிறார். இதற்கு காரணமே உறவினர்களால் படும் வேதனையும் அவர்கள் கொடுக்கும் டார்ச்சர் தான் இது. நடிகைகளை பொறுத்தவரை செல்வாக்கில் எந்தகுறையும் இருக்காது. ஆனால் அவர்களை சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து ஏராளமான பிர்ச்சனைகள் வரக்கூடும். அதனால் தான் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று இப்படியொரு முடிவை எடுக்கிறார்கள்.