ஒரு வருடத்திற்கு மேலாக மகளை பார்க்கவில்லை! கண்ணீருடன் நடிகை ரேகா..
80, 90களில் கடலோரக்கவிதைகள் படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகியவர் நடிகை ரேகா. அப்போது பல திறமைகளை கொண்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தற்போது வயதாகி படங்களிலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குக்வித் கோமாளில் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சமீபத்தில் அமெரிக்காவில் படித்து வந்த அவரது மகளின் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மகள் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என் மகளை பார்த்து ஒன்றரை வருடமாகிறது.
அமெரிக்காவில் பட்டப்பிடிப்பை முடித்து அங்கேயே வேலையையும் பார்த்து வருகிறார். கொரோனா பாதிப்பு அதிகமானதால் அமெரிக்காவில் இங்கு வரமுடியாமல் அங்கேயே வேலை பார்த்தும் வருவதால் எங்களுக்கு விசா கிடைக்காமல் கஷ்டத்தில் இருக்கிறோம்.
அதோடு மகள் அமெரிக்காவில் இருப்பது சிலருக்கு பொறாமையில் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.