போதை பார்ட்டி நடத்தியே ரீமா கல்லிங்கல் வாழ்க்கை போயிடுச்சு.. நடிகை பற்றி அதிர்ச்சி கொடுத்த பிரபல பாடகி..
கேரள சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசபட்டு வரும் விசயம், ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைப் பற்றிதான். நடிகைகள் பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல புகார்கள் நடிகைகள் கூறியதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது. இதனால் நடிகர் மோகன்லாலும் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்நிலையில் பாடகி சுசித்ரா நடிகை ரீமா கல்லிங்கல் பற்றிய சில தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ரீமா கல்லிங்கல் போதைப்பொருள் பார்ட்டிகளை நடத்தினார். அவர் கேரியர் பாதிக்கப்பட்டதர்கு அவர் நடத்திய பார்ட்டிகளே காரணம். சில விஷயங்களை ஒரு விருந்தில் பயன்படுத்தக்கூடாது.
ரீமா கல்லிங்கல் மற்றும் அவரது அப்போதைய காதலன் ஆஷிக் அபு மீது ரெய்டு நடத்தப்பட்டது. ரீமா வீட்டில் நடந்த பார்ட்டிகளில் எத்தனை ஆண்களும் பெண்களும் போதைப்பொருள் பயன்படுத்தினார்கள் தெரியும், யாருமே அவரிடம் கேள்வி கேட்பதில்லை.
ரீமா தரும் சாக்லெட்டை நாங்கள் தொடமாட்டோம். எத்தனை விஷயங்களில் அவர் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை தெரிந்தும் என்னால் நம்பமுடியவில்லை. நடிகர்களே சிலர், இரண்டு லைன்(போதை) நான் அடிக்கவில்லை என்றால் என்னால் நடிக்க முடியாது, செட்டுக்கே வரமுடியாது என்று கூறுவார்கள் என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.