சூர்யாவுடன் காதல் கதைக்களத்தில் நடிக்க ஆசை.. நடிகை ருக்மிணி வசந்த் வெளிப்படையான பேச்சு
Suriya
Rukmini Vasanth
By Karthick Raja
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். இவர் நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் ஒன் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
இதை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் டாக்சிக் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. மேலும், ஜீனியர் என்டிஆர் உடன் இணைந்து டிராகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை ருக்மிணி வசந்தின் பழைய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது.
அதில்,நடிகை ருக்மிணியிடம் உங்களுக்கு எந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை என கேட்க, அதற்கு அவர், முழுக்க காதல் படம் ஒன்றில் நடிக்க ஆசை என சொல்ல, உடனே எந்த ஹீரோவுடன் என கேள்வி கேட்க, சில நொடி யோசித்து நடிகர் சூர்யா சார் என பதில் அளித்துள்ளார்.