விஜய்யை வைத்து மாமா வேலை பார்த்த அப்பன்-னு திட்னாங்க!! தளபதி தந்தை எஸ் ஏ சந்திரசேகர்..
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து பல கோடி ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் விஜய். வாரிசு படத்திற்கு பின் தற்போது தளபதி 67 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
விஜய்யின் இந்த உச்சத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் தான். அந்த அளவிற்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விஜய்யை வைத்து 7 படங்களை எடுத்து தூக்கிவிட்டார்.
பல கஷ்டங்களில் இருந்தும் கூட விஜய்க்கு பக்க பலமாக இருந்த எஸ் ஏ சி-க்கும், விஜய்க்கும் இடையில் சண்டை பிரச்சனை கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது. ஆனால் எங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான்.
ஆனால், அவரை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்று எஸ் ஏ சி சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்த எஸ் ஏ சி அவர்கள், விஜய் குறித்த பல விசயங்களை ஓப்பனாக பேசியுள்ளார்.
அதில் விஜய் நடித்த படத்தில் எந்த படம் கவர்ந்தது என்ற கேள்வி கேட்டார் சித்ரா லட்சுமணன். அதற்கு எஸ்ஏசி, எனக்கு எப்பவும் ரசிகன் தான். ஃபுல் எண்டர்ரெண்ட் படமாக விஜய்யின் வாழ்க்கையை மாற்றியது.
அப்படத்தினால் பலர் திட்டியும் விமர்சித்தும் இருந்தனர். படத்தில் விஜய் பல கிளாமர் காட்சியில் நடிகையுடன் நடித்திருப்பார். அதனால் என்னை, அப்பனே மகனுக்கு மாமா வேலை பார்க்கிறான் என்று திட்டினார்கள் என்று எஸ்ஏசி கூறியுள்ளார். அதன்பின் பூவே உனக்காக படம் ஹீரோவை நடிகனாக்கியது.