காசுக்காக அதை பண்றேன்-ஆ..தனுஷ் டார்ச்சர் பண்ணா சொல்லு!! சாய் பல்லவி ஓப்பன் டாக்..
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. மருத்துவருக்கு படித்த இவர் சினிமா மேல் உள்ள ஆசையால் நடிக்க வந்து விட்டார். அழகான சிரிப்பு, சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்த இவர் நடிப்பில் அடுத்த வாரம் 31 - ம் தேதி தீபாவளி பண்டிகை அன்று அமரன் படம் வெளியாக உள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்து என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது, அமரன் படம் குறித்து பல பேட்டிகளில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பேட்டி ஒன்றில் சாய் பல்லவி அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் கால்ஷீட் தாண்டி படப்பிடிப்பு நடைபெற்றால் கூடுதல் சம்பளம் கேட்கிறார் சாய் பல்லவி என்று சில பத்திரிக்கைகள் என்னை எழுதியது பார்த்து ஷக்காகினேன்.
கூடுதல் சம்பளம்
காசுக்காத்தான் நடிக்கணும்னா 100 படத்தை ஒப்பந்தம் செய்துவிட்டு பணத்தை வாங்கிப்போட்டுக்கொண்டு அதன்பின் நடிக்காமல் சென்றிருப்பேன். நடிப்பது பிடிச்சிருக்கு, அதில் கிடைக்கும் அங்கீகாரமும் நம்ம வீட்டுப் பெண்ணிடம் படம் ரிலீஸாகிறது என சொல்லும் அன்பும் தான் தொடர்ந்து நல்ல படங்கலை பண்ண வேண்டும் என்ற முனைப்பை கொடுப்பதாக சாய் பல்லவி பேசியிருக்கிறார்.
மேலும், செல்வராகவன் படத்தில் என் ஜி கே, தனுஷுடன் மாரி 2 படத்தில் நடித்த போது தனுஷ் ஏதாவது பண்ணா என்கிட்ட சொல்லு, நான் கேட்கிறேன் என்று செல்வா சார் சொல்வார். அதேபோல் செல்வாசார் ரொம்ப டார்ச்சர் செய்தால் என்கிட்ட சொல்லுங்கன்னு தனுஷ் சார் சொல்வார். ஆனால் அண்ணன் தம்பி இருவரும் அவங்களுக்கு கஷ்டமான சீன் கொடுக்கணும், கஷ்டமான வசனம் கொடுக்கணும்னு போட்டுப்படுத்தி எடுத்துட்டாங்க. ஆனால் இருவரும் பக்கா புரொபஷ்னலிஸ்ட் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.