எவ்ளோ காசு கொடுத்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டேன்!! நிஜ வாழ்க்கையில் சாய் பல்லவி இப்படிப்பட்டவரா?
பிரேமம் படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் சாய் பல்லவி.தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார்.
கடந்த 2019 -ம் ஆண்டு ஒரு பிரபல அழகுசாதன கிரீம் தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தங்களது நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வருமாறு சாய் பல்லவியை அழைத்துள்ளனர்.
அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு 2 கோடி வரை சம்பளம் தருவதாகவும் கூறி இருக்கின்றனர். ஆனால் இதற்கு அவர் நீங்கள் எவ்ளோ காசு கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன் என்று மறுத்து உள்ளார்..
சாய் பல்லவி, சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் மேக்கப் போடாமல் இயல்பான தோற்றத்தில் நடிக்க விரும்புவார். அழகு சாதன பொருட்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் அறிந்த சாய்பல்லவி அது சார்ந்த விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.