என்னடா சொல்றீங்க.. சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து இல்லையா..
வெள்ளித்திரையில் அழகிய காதல் திருமண ஜோடியாக வலம் வந்தவர்கள் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா. கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி நான்கு வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென விவகாரத்து பெற்றுக்கொண்டு பிரியவுள்ளனர்.
தங்களுடைய விவகாரத்து செய்தியை இருவரும் இணைந்து அறிவித்த நிலையில், ரசிகர்கள் உட்பட திரையுலகை சேர்ந்த பலரும், அதிர்ச்சியடைந்தனர். சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சி என்றும். அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என நாக சைதன்யா கூறினார். மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என நாக சைதன்யா கூறியிருந்தார்.
இந்நிலையில், திடீரென விவகாரத்து பதிவு நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனை வைத்து பார்க்கும் பொழுது இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம், இருவரும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று..