கணவருடன் விவாகரத்து விஷயத்தில் நடிகை சமந்தா எடுத்த முடிவு! கடைசியில் நீதிமன்றத்தில் கால்பதிக்கும் நிலை..

samantha divorce nagachaitanya akkineni courtcase
By Edward Sep 28, 2021 01:05 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்தி வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்து பின் காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். தற்போது சில காரணங்களால் இருவருக்கும் விவாகரத்து என கிசுகிசுக்கப்பட்டு பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. சமந்தா - நாக சைதன்யா இதுபற்றி எந்த கருத்துக்களும் கூறாமல் இல்லை என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள்.

ஆனால் அவர்களிடன் தனிப்பட்ட மற்றும் குடும்பத்தினரிடம் சில மாறுதல்கள் இருப்பதாகவும் நடவடிக்கைகளில் சில சந்தேகங்கள் இருப்பதாக கூறி வருகிறார்கள் சிலர். அதேபோல் சமீபத்தில் நாக சைதன்யாவுடன் நடிகை சாய் பல்லவி இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியொன்றில் இதுபோன்ற செய்திகள் வர நாளை வேறொரு செய்தி வந்தால் அதை மறந்து விடுவார்கள் என்றும் இதை நான் பொருட்டாக எடுத்து கொள்ளவிருப்பமில்லை என்று கூறினார்.

அப்படியிருக்க அப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் அழைக்கப்பட்டு தன் குடும்பத்தினருடம் பார்ட்டி கொடுத்துள்ளார். ஆனால் அந்த கொண்டாட்ட பார்ட்டியில் நடிகை சமந்தா இல்லாமால் அமலா, நாகர்ஜூனா, அகில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால் சமந்தா மட்டும் கலந்து கொள்ளாமல் இருந்தது சிலரிடன் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா, நடிகை சமந்தா தன்னை பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர தடுக்கும் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.