நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன்.. உருக்கமாக பேசிய நடிகை சமந்தா
இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அடுத்து மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுக்க போகிறார். இதனை அவரே அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா அளித்த சமீபத்திய பேட்டியில், தான் தாய்மையை அடைய ஆவலுடன் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். "நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன். நான் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் (passion) தான் இருந்தேன். தற்போது ஒரு புது வித வலிமை மற்றும் நோக்கத்தை என்னிடம் உணர்கிறேன். இந்த பயணத்திற்காக நான் காத்திருக்கிறேன்." என கூறியுள்ளார்.

நடிகை சமந்தாவின் இந்த உருக்கமான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.