விவாகரத்துக்கு பின் இரண்டாம் திருமணம்? நடிகையுடன் டேட் செய்யும் சமந்தாவின் மாஜி கணவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டு நடித்தார். இதன்பின் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்த சமந்தா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சித்தார்த்தை பிரிந்தார்.
நாகசைதன்யாவுடன் பிரிவு
பின் நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு 2017ல் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னும் நடிப்பில் ஆர்வம் கொண்டு போல்ட்டான ரோலையும் தேர்ந்தெடுத்த நடித்தார். பின் தி பேமிலி மேன் 2 படத்தில் எல்லைமீறிய காட்சிகளில் நடித்ததால் குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் இருவரும் பிரிவதாக கூறி விவாகரத்து செய்துவிட்டார் சமந்தா. விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக மாறிய சமந்தா ஆன்மீகம், எல்லைமீறிய போட்டோஷூட் மூலம் உலா வந்தார்.
இந்நிலையில் நாகசைதன்யா அடுத்ததாக திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் நாக சைதன்யா சொகுசு பங்களா ஒன்றை கட்டியுள்ளார்.
நடிகையுடன் டேட்டிங்கில் மாஜி கணவர்
அங்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அவர் அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
டேட்டிங் செல்கிறார்களா என பலரும் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை ஷோபிதா மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்துள்ளார்.