இப்படியொரு அடக்கவுடக்கமான பெண் தான் நடிகை சமந்தா!! வைரலாகும் சமீபத்திய புகைப்படங்கள்
குறுகிய காலக்கட்டத்தில் பல நடிகைகள் பிரபலமாவது சகஜம், ஆனால் கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தியவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்தாலும் அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நோடியாக நடிக்க ஆரம்பித்தார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து வந்த சமந்தா விஜய், விஜய்சேதுபதி, சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், நானி, என் டி ஆர் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக திகழ்ந்து வந்த சமந்தா நாக சைதன்யாவை 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கு போனாலும் கணவர் புராணம் பாடி வந்த சமந்தா, கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
இதற்கான காரணம் பலவிதமாக கூறப்பட்ட நிலையில், விவாகரத்துக்கு பின் க்ளாமரில் தாராளம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் புஷ்பா, காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் எல்லைமீறி நடித்தும் ஆடியும் போட்டோஷூட்டில் வரம்புமீறிய புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும் பாலிவுட் படத்தில் பிஸியாகவும் நடித்து வரும் சமந்தா இடையில் போட்டோஷூட்டும் நடித்து வருகிறார். தற்போது சேவ் சாயில் என்ற நிகழ்ச்சியை நடிகை சமந்தா சத்குரு அவர்களை பேட்டி எடுத்துள்ளார்.
அதில் சமந்தாவிடம் பேசிய சில விசயங்களை நடிகை சமந்தா இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது சமந்தாவின் அடக்கவுடக்கமான சேலை மற்றும் பேட்டி இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.