குழந்தைக்கு ஓகே கூறிய சில மாதங்களில் விவாகரத்து! சமந்தா இதைதான் கூறினாராம்.

samantha tamilactress nagachaitany
By Edward Oct 11, 2021 01:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பலர் காதலித்து திருமணம் செய்து ரியல் ஜோடிகளாக மின்னுவார்கள். அப்படி வின்னைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஒன்றாக நடித்து பிரபலமானவர் நடிகை சமந்தா நாக சைதன்யா. 10 வருட காதலில் 2017ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தியை வெளியிட்டு ஆதங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்ததற்கு அப்படிஎல்லாம் இல்லை என்று சமந்தாவே கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதையடுத்து சமந்தா பற்றிய ஒவ்வொரு செய்தியும் பெரியளவில் பேசப்பட்டது. தற்போது சமந்தா பற்றி சில செய்திகளை சகுந்தலம் படத்தின் தயாரிப்பாளர் நீலிமா பகிர்ந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடித்து வந்த சமந்தா சகுந்தலம் படத்தில் கமிட்டாகிய போது வரும் ஜூலை அல்லது ஆக்ஸ்ட் மாதத்திற்குள் முடிக்க கேட்டுள்ளார்.

அதற்கு ஏன் என்று கேட்டதற்கு நாங்கள் இருவரும் குழந்தை பெற்ற்க்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தாயாக விரும்புவதற்கு தான் முன்னிரிமை அளிப்பேன் என்றும் அப்படி குழந்தை பிறந்தால் அதுதான் என் உலகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதனால் சரித்திர கதையம்சம் கொண்ட இப்படம் நீண்டகாலம் எடுக்க காலம் ஆகும் என்பதால் படத்தினை சீக்கிரம் மூடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

சமந்தா ஆரம்பத்தில் இந்த படத்தில் கையெழுத்திட தயங்கினார். ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிடுவோம் என்ற பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுதான் அவரது கடைசிப் படம் என்றும் அதன் பிறகு நீண்ட இடைவெளி எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து படத்தை ஓய்வு எடுக்காமல் படட்தை விரைவாக முடுக்க நேரிட்டது என்று கூறியுள்ளார்.