முன்னாள் கணவருக்காக போட்ட டாட்டூ.. விவாகரத்தாகி நான்கு ஆண்டுகளுக்கு பின் நீக்கிய சமந்தா
நடிகை சமந்தாவிற்கு கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி சில ஆண்டுகள் மட்டுமே இணைந்து வாழ்ந்து வந்தனர்.
பின் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிடித்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா.
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து சமந்தாவும் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்துக்கு பின் தனது திருமணம் மற்றும் முன்னாள் கணவர் குறித்து நினைவாக இருக்கும் விஷயங்களை சமந்தா மாற்றியமைத்து வந்தார். தனது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண ஆடையை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தனது முன்னாள் கணவர் நினைவாக தனது முதுகில் குத்தியிருந்த YMC என்கிற டாட்டூவை நீக்கியுள்ளார்.
நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்த முதல் படம் 'யே மாய சேசாவே'. இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்ததால், அப்படத்தின் நினைவாக YMC டாட்டூவை தனது முதுகில் குத்தியிருந்தார் சமந்தா. ஆனால், விவகாரத்தாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அதனை தற்போது நீக்கியுள்ளார்.
வீடியோ இதோ :