5 நிமிஷத்துக்கு 5 கோடியா!! விவாகரத்துக்கு பின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிய நடிகை சமந்தா..
டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். யோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். ஏமாற்றம், வியாதி, விரக்தி போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார்.
14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து வரும் சமந்தா தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். இந்நிலையில் 37 வயதை கடந்துள்ள நடிகை சமந்தா, இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளதாம். இதில் ஹைதராபாத்தில் உள்ள வீட்டின் மதிப்பு மட்டுமே ரூ. 7 கோடியாகும் என்கின்றனர்.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டதற்கு சுமார் 5 கோடி சம்பளமாக கொடுத்து தன் மார்க்கெட்டை உயர்த்தி இருக்கிறார்.
வெறும் 5 நிமிட பாடலுக்காக 5 கோடியை வாங்கிய பின், தன்னுடைய சம்பளத்தை 10 கோடிக்கு உயர்த்தியிருக்கிறார். பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா சிடடெல் படத்திற்காக 10 கோடி வாங்கி இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.