சூர்யாவை பார்த்து பயந்து போன நடிகை சமந்தா!! இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டாப் நடிகையாக திகழ்ந்தும் வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டுள்ள நடிகை சமந்தா, கடந்த 2016ல் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியா 24 படத்தில் நடித்திருந்தார்.
சூர்யா சமந்தாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 24 படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் நேற்று அதை கொண்டாடியிருந்தனர். இந்நிலையில் அப்படத்தினை பற்றிய ஒரு சம்பவத்தை நடிகை சமந்தா அந்த சமயத்தில் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, காலையில் எடுக்கப்பட்ட ரொமாண்டிக் பாடல் ஒன்றில் தன்னுடன் இணைந்து சூர்யா டூயட் பாடிய சூர்யா, மதியம் ஆத்ரேயா-வாக வந்து மிரட்டியதாகவும் அதை பார்த்து உண்மையில் நான் மிகவும் பயந்துவிட்டதாகவும் சமந்தா கூறியிருக்கிறார். 24 படம் வெளியாகி 100 கோடி வசூலை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.