அவர் தான் எல்லாம்!! கொஞ்ச காலம் இருப்பினும் நன்மை தான்.. செம போல்டா சொன்ன சமந்தா
சமந்தா
சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சாதிப்பவர்கள் பலர், அதில் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் நுழைந்து ரூ. 500 முதல் சம்பளம் வாங்கியவர் அப்படியே நாயகியாக நடிக்க தொடங்கி இப்போது அசுர வளர்ச்சி கண்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என கலக்கியவர் பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கேயும் பெரிய அளவில் அவர் வலம் வர வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
சமந்தா பேட்டி
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பல விஷயங்களை சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், "ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் சீரிஸ் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் பலரால் கவரப்பட்டது.
அப்படி மக்கள் மனதை வென்ற வெப் சீரிஸில் நானும் ஒரு பங்காக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. பிரியங்கா சோப்ரா அனைத்து பெண்களுக்கும் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்கிறார்.
அவரிடம் இருந்து பலவற்றை கற்று கொள்ள வேண்டும். நாம் திறமையானவர்களை சந்தித்து அவர்களுடன் பழகும்போது நமக்கான சவாலும் அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்களின் நட்பு வாழ்க்கையில் கொஞ்ச காலம் கிடைத்தாலும் அது நமக்கு நடக்கும் மிகப்பெரிய நன்மை" என்று கூறியுள்ளார்.