சம்பளத்தை ஏற்ற விளம்பரத்தை கையில் எடுத்த நடிகை! அதுவும் இப்படியா
முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் இருப்பவர் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக நடிக்கும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.
அதனால் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்னும் படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நயன்தாரா கொடிகட்டிப் பறந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் சமந்தாவிற்கு ஏராளமான வரவேற்பு இருந்து தான் வருகிறது.
அதனால் விக்னேஷ் இருவரையும் இணைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சமீபகாலமாக சமந்தா நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அதனால் சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தை முழுமையாக எதிர்பார்த்து காத்து உள்ளார். அதற்கு காரணம் இப்படத்தின் வெற்றியை பொருத்து இவருடைய சம்பளத்தை உயர்த்துவதற்க்கு தானாம்.
5இயக்குனர்கள் கதையை கேட்டும் கால் ஷீட் கொடுக்காமல் அட்வான்ஸ் வாங்காமல் இருந்துள்ளார். கையில் இருக்கும் படம் வெளியாகி என்ன ரிசல்ட் என்று தெரியுமோ அப்போதுதான் காலஷீட் கொடுக்க முடிவெடுப்பாராம்.
மேலும் விளம்பரம் அதிகளவில் வந்து கொண்டே இருக்க கிளாமரில் எல்லை மீறி போட்டோஷுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.