திருமணத்திற்கு முன்பு அந்த நடிகரால் எல்லை மீறிய அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்..சமீரா ரெட்டி பட்ட கஷ்டங்கள்
பாலிவுட் படங்களில் நடித்த வந்த சமீரா ரெட்டி, 2008 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சமீரா ரெட்டி.
இதையடுத்து தமிழில் சில படங்கள் நடித்து வந்த இவர், 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீரா ரெட்டி திருமணத்திற்கு பிருகு நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீரா ரெட்டிக்கு நடந்த அட்ஜசுமென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், ஒரு சமயத்தில் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்தது. அந்த சமயத்தில் சமீரா ரெட்டி அவருக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசினார்.யார் யார் தனது டார்ச்சர் கொடுத்தார் என்பதை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தார்.
இதனால் சில பிரபலங்கள் சிக்கி விட கூடாது என்பதற்காக ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்றெல்லாம் பேசியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.