தெலுங்கு சினிமாவில் அது தான் முக்கியம்!! ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை சம்யுக்தா..
மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இடையில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை எடுத்து ஷாக் கொடுத்தார். தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
தற்போது ராம் மற்றும் ஸ்வயம்பூ போன்ற படங்களில் நடித்து வரும் சம்யுக்தா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தென்னிந்திய சினிமாத்துறையை பற்றி சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில், நான் மலையாள சினிமாவில் நடிக்கும் போது அவர்கள் மேக்கப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
அப்படி தான் நான் நடித்து பழகி இருந்தேன். ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் போது மேக்கப் தான் முக்கியம் என்று கூறினார்கள். அதனால், ஷாட்டுக்கு தயாராகி வசனத்தை மனப்பாடம் செய்து வந்து நடிக்க நின்றால் என் சேலையில் ஏதோ சரியில்லை என சொல்லி சரி செய்து வரச்சொல்வார்கள்.
இதில் நான் அனைத்தையும் மறந்துவிடுவேன் என்றும் இப்படி மற்ற மொழிப்படங்களில் ஹீரோயின்களுக்கு மேக்கப் மட்டுமெ முக்கியம் என்ற நிலை இருப்பதாக சம்யுக்தா ஓப்பனாக பேசியிருக்கிறார்.