சங்கீதா வாபஸ் வாங்கி இருக்காங்க..பிரச்சனை முடியல!! எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்காங்க? பிரபலம்..
விஜய் - சங்கீதா
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்தப்பின் அவருடைய குடும்பத்தை பற்றிய பல விமர்சனங்கள் பொதுவெளியில் விமர்சிகப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததையும் பலரும் விமர்சித்தனர். இதனையடுத்து கடந்த வாரம் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், வழக்கை வாபஸ் வாங்குவதாக சங்கீதா தெரிவித்தார்.

இதனையடுத்து, சுதந்திர தின விழா கோட்டையின் நடந்தபோது திரிஷா விஐபி வரிசையில் அமர்ந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சமீபத்தில் இதுகுறித்து பிஸ்மி அளித்த பேட்டியில், சங்கீதா வாபஸ் பெற்றுவிட்டார். ஒன்றாக இனி இருப்பார்கள் என்று பலரும் சொல்லி வந்தனர். ஆனால் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழாவில் திரிஷா விஐபி வரிசையில் அமர்ந்திருந்தார் என்றால் குடும்பத்தில் இன்னும் நார்மலான சூழ்நிலை உருவாகவில்லை என்றுதான் தெரிகிறது.

விஜய் மகன்
விஜய் மகன் சொன்னதுபோல், தன் அப்பா இப்போது முதல்வராக இருக்கும்போது தங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். அதேபோல் சங்கீதாவும் இனி விஜய்யை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று வழக்கை வாபஸ் வாங்கியிருக்கலாம், மற்றபடி அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான உறவு ஏற்பட்டதுபோல் தெரியவில்லை. இதைத்தான் ரசிகர்களும் பேசி வருகிறார்கள். சோசியல் மீடியாவில் மீண்டும் திரிஷாவை வைத்து விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

அதேசமயத்தில் ஒரு சிலர் விஜய்யின் நெருங்கிய தோழி திரிஷா என்பதால் விஜய்யின் பெற்றோருடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் என்று சப்போர்ட் செய்து வருகிறார்கள். இன்னும் ஒருசிலர் ஏற்கனவே பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் மீண்டும் மீண்டும் இவங்க எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்காங்க? ஆமா நீங்க பேசுகிறது எல்லாம் உண்மை என்று சொல்ல வருகிறார்களா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.