பெண்கள் ஆடை குறித்து பேசிய சந்தானம்.. பெரும் சர்ச்சையில் சிக்கிய சம்பவம்
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிக்கிலோனா’. இந்த படத்தில் சந்தானம், அனகா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சந்தானம் என்றாலே படங்களில் மற்றவர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது, கலாய்ப்பது தான் ட்ரேட் மார்க்.
ஆனால், இந்த படத்தில் சந்தானத்தின் சில வசனங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஆடை சுதந்திரம் பற்றி சந்தானம் பேசிய வசனமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தின் ஒரு காட்சியில் நாயகியிடம் சந்தானம் கோவிலுக்கு செல்லலாம் என்று கூறுவார். அப்போது நாயகி அரை குறை ஆடை அணிந்து சந்தானம் முன் வந்து நிற்பார். அப்போது சந்தானம் என்ன ட்ரெஸ் இது என்று கேட்க, அதற்கு நாயகி ‘இது ஆடை சுதந்திரம் இதில் நீ தலையிடாதே ‘ என்று சொல்வார்.
அதற்கு சந்தானம் ‘உனக்கு ஏத்தா மாதிரி வாழ்றது சுதந்திரம் இல்ல, நீ வாழ்றத மற்றவங்க ஏத்துக்கறது தான் சுதந்திரம், கொஞ்சம் இழுத்தா அவுந்துரும் இதுக்கு பேர் சுதந்திரமா’ என்று கூறுவார். தற்போது இந்த வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பூமர் வாயன் Vs வெற்றிமாறன் pic.twitter.com/auLkLobn2F
— Mannu (@mannu040) September 13, 2021