தனுஷா வேண்டவே வேண்டாம் என ஓடிய நடிகை? அப்படி சொல்லி இப்படி விழுந்துட்டீங்களே!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமான மலையாள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் இருந்தவர் நடிகை சரண்யா மோகன். நடிகர் விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தில் குழந்தையாக நடித்தவர் பின் தளபதியின் வேலாயுதம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதையடுத்து ஒருசில படங்களில் தமிழ், மலையாலம் என கதாநாயகியாக நடித்தார். இதையடுத்து திருமணம் குழந்தை என சினிமாவை விட்டுவிலகினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தின் போது நயன் தாராவிற்கு தங்கையாக நடித்திருந்தார்.
முதலில் அவர் அப்படத்தில் நடிக்க அனுகியபோது வேண்டவே வேண்டாம் என்று கூறினாராம்.
ஆடிஷனுக்கு மட்டும் வாருங்கள் என்று கூப்பிட்டுள்ளனர். அங்கு சென்றால் ஆடிஷனுக்கு பலர் காத்திருந்ததால் எனக்கு கிடைக்காது என்று சந்தோஷப்பட்டாராம். ஆனால் ஆடிஷனில் ஓகே செய்துள்ளனர்.
சரண்யா மோகனின் வரவேற்பை தொடர்ந்து மற்ற பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததாம். அப்போது பல படங்களில் நடித்தாராம் சரண்யா மோகன். யாரடி நீ மோகினி படத்தை மிஸ் செய்திருந்தால் இந்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை பெற்று இருப்பாரா என்பது சந்தேகம்தான்.