சரிகமப சீனியர் 5!! வரன்னு சொல்லிட்டு போன கணவர்!! பவித்ராவின் மறுபக்கம்..
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.
சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது.
போட்டியாளர் பவித்ரா
அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர். அதில், பவித்ரா என்ற போட்டியாளர் பாடியபின் தன்னுடைய வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொண்டது அனைவரையும் கண்ணீர் மல்க உருக வைத்துள்ளது.
5 மாதத்திற்கு முன் கணவர் இறந்துவிட்டார், 5 நிமிஷத்துல வரன்னு சொல்லிட்டு போனவர் விபத்தில் இறந்துவிட்டார். அவரின் ஆசையை நிறைவேற்றத்தான் இங்கே வந்திருக்கிறேன் என்று பவித்ரா கூறியதும் நடுவர்கள், டி ராஜேந்தர் உட்பட பலரும் கண்ணீருடன் அவரை பாராட்டியுள்ளனர்.