சரிகமப சீனியர் 5!! அரங்கையே உருக வைத்த அப்பா - மகன் பாசம்..
சரிகமப சீனியர் 5
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.
சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது.
அப்பா - மகன் பாசம்
இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.
இந்நிலையில் கெளசிக் என்ற போட்டியாளர், தான் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன். இதுவரை அப்பா முன்பு பாடியது இல்லை, அதனால் பயமாக இருக்கிறது என்று பாடகர் விஜய் பிரகாஷிடன் கூறியிருக்கிறார்.
அதன்பின் கெளசிக்கின் அப்பாவை வரவழைத்து நீங்களே என்னுடைய 4வது கிரீன்லைட்டை வைத்துவிடுங்கள் என்று கூறியதும் அப்பா எமோஷ்னலாக அழுதுள்ளார். இந்த சம்பவம் அரங்கில் இருந்த அனைவரையும் உருக வைத்திருக்கிறது.