தலை முடி கொட்ட அந்த தப்பான முடிவு தான் காரணம்!! பிரபல இயக்குனர் முன் உண்மையை உடைத்த சத்யராஜ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகை சத்யராஜ். வில்லன், ஹீரோ என்று பல பரிமாணங்களில் நடித்து வந்த சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து கலக்கிக்கொண்டு வருகிறார்.
முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய ரோலில் நடித்து வரும் சத்யராஜ், இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருடன் இணைந்து ஒரு பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அந்த பேட்டியில் சத்யராஜ் பேசுகையில், நான் ஹீரோவாக இருக்கும் போது தப்பா முடிவெடுக்கும் விஷயத்தில் என்னை மிஞ்ச யாரும் கிடையாது.
நான் யானை மாதிரி, எங்கு மண் இருந்தாலும் சும்மா இருக்க முடியாது எடுத்து மேல போட்டுப்பேன். அப்படி போட்டுக்கிட்ட மண்ணில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரு படத்தை மிஸ் செய்து, அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, என் வயிறு எரிந்தது.
ஏனென்றால் அந்த படத்தை வேண்டாம்னு சொல்லி வேறொரு படத்தில் நடிக்க, அந்த படம் கே எஸ் ரவிக்குமார் படத்தோடு ரிலீஸ் ஆகி, என்னோடது ரெண்டே வாரம், அவரோடது 25வது வாரம், ஒரு மனுஷன் தூங்கமுடியுமா. அதுவரைக்கும் நல்ல இருந்துச்சி முடி, அப்போ கொட்டுனது தான் என்று காமெடியாக பகிர்ந்துள்ளார் நடிகர் சத்யராஜ்.