வெறும் முருங்கை பிசினஸ்!! ரூ. 1.75 கோடி சம்பாதிக்கும் பெண் விஞ்ஞானி..
காமினி
ஒருசிலர், சிறு தொகையை வைத்து தொழில் ஆரம்பித்து பெரியளவிலான சாதனையையும் வெற்றியையும் பெற்றுவிடுவார்கள். அப்படித்தான் ஒருவர் வணிகத்தின் மூலம் இன்று கோடிகளில் சம்பாதித்து வருகிறார். அதிலும் தோட்டக்கலைத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட ஒரு விஞ்ஞானி தான் அந்த நபர். அவர் வேறுயாருமில்லை காமினி என்ற ஆர்கானிக் விவசாயிதான்.
முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கும் போது வயல்கலில் அயராது உழைக்கும் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று காமினி சிங்கிற்கு தோன்றியிருக்கிறது. விஞ்ஞானி வேலையை விட்டு இந்த துறைக்கு வந்துள்ளார் காமினி.
அப்படி 17 வருடம் தோட்டக்கலைத் துறையொல் அனுபவம் வாய்ந்த காமினி உத்திரபிரதேசத்தில் விவசாயிகளுக்கு உதவ, 2016 முதல் 2017 ஆம் ஆண்டு முழுவதும், விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் பற்றி பயிற்சி எடுத்தார்.
அதன்பின், விவசாயிகளும் அரசாங்க மானியங்களை பெறுவதற்கு இந்த முயற்சியை செய்தார்களே தவிர, காமினி சொன்னதுபோல் ஆர்கானிக் முறைகளை பயன்படுத்தவில்லை.
Doctor Moringa Private Limited
இதன்பின் யோசித்த காமினி, பாரம்பரிய பயிர்களுடன் சேர்த்து முருங்கையை பயிரிடச்சொல்லியுள்ளார். இதனால்ல் டாக்டர் மோரிங்கா பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை 2019ல் ஆரம்பித்து, தற்போது இந்நிறுவனத்தில் 22 க்கும் மேற்பட்ட முருங்கையை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனையாகி வருகிறது.
முருங்கை சோப், முருங்கை பிஸ்கட், முருங்கை மாத்திரைகள், முருங்கை எண்ணெய், முருங்கை சீரம் என பல பொருட்கள் இந்நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. சிறிதாக ஆரம்பித்த இந்நுறுவனத்தில் 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்றுக்கொண்டு இன்று எண்ணற்ற விவசாயிகள் காமினியின் பயிற்சியால் முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வெறும் ரூ. 9 லட்சம் பர்சனல் லோன் வாங்கி காமினி அளித்த பயிற்சியால், தற்போது அதன்மூலம் ரூ. 1.75 கோடி வருமானம் பெற்று பிசினஸாக மாற்றியுள்ளார். இதன்மூலம் 30 சதவீத லாபத்தை பெற்று 17 ஏக்கர் நிலத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகிறார் காமினி சிங். 40 ஆயிரம் வருமானம் கிடைத்த விவசாயிகளுக்கு தற்போது ரூ. 1.5 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெற்று வருகிறார்கள்.