வாய்ப்புக்காக இயக்குனர் அப்படி கேட்டால் மறுக்க கூடாது!! 40 ஆண்டு நடிகை ரம்யா கிருஷ்ணனின் ரகசியம்..
இந்திய சினிமாவில் பல மொழிகளில் தன் இளமை காலம் முதலே நடிக்க ஆரம்பித்து தற்போது நீலாம்பரி, சிவகாமி தேவி என்று அழைக்கும் அளவிற்கு பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். கிடைக்கும் எந்த கதாபாத்திரமானாலும் சரி அதில் சிறப்பான நடிப்பை காட்டி அசத்துவார்.
நடிகைகளிடம் ஒரு இயக்குனர் அணுகி கதையை கூறினால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன், இந்த காட்சியில் நடிக்கமாட்டேன், இப்படி, அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறுவது அழகு கிடையாது. இயக்குனர் ஒருவர் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து சொன்னால் அவர் ஏன் அப்படி யோசித்தார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அவரின் நோக்கம் தவறாக இருந்தால் நடிகைகள் மறுக்கலாமே தவிர கதைக்கும் எழுதிய திரைக்கதைக்கும் அந்த கதாபாத்திரமும் காட்சியில் வலுவாக இருக்கும். அதனால் அது மோசமாக இருக்கிறது ஆபாசமாக இருக்கிறது என்று மறுக்கக்கூடாது என்று ரம்யா கிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
நடிகைகள் அப்படி நடிக்க மாட்டேன் என்று பல காரணங்களை கூறி, அவர்களின் எதிர்காலத்திற்கு அவர்களே தடையாக இருந்துவிடுகிறார்கள். அப்படி கூறி மறுத்தால் அந்த இயக்குனர் வேறோரு படம் எடுக்கும் போது உங்களை யோசித்துக்கூட பார்க்க மாட்டார்.
அதனால் தான் ரம்யா கிருஷ்ணன், சூப்பர் டீலக்ஸ் படத்தில் தன் மகனே அவன் வாயால் மோசமான வார்த்தை கொண்டு திட்டிய காட்சியில் நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன். இன்று வரை அந்த கதாபாத்திரத்தின் தாக்கம் இருந்து வருகிறது.
மேலும் தற்போது 50 வயதை தாண்டினால் கூட கவர்ச்சியையும் சிறப்பான நடிப்பையும் அவரால் கொடுக்க முடிகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். அதனால் தான் 40 ஆண்டுகளாக சினிமா பயணத்தில்
வலுவாக பல ரோலில் நடிகை ரம்யா கிருஷ்ணனால்
நடிக்க முடிந்திருக்கிறது.