சொன்னதை மீறி மனைவி கீதாஞ்சலி செய்த காரியம்!! வருத்தத்தில் இயக்குனர் செல்வராகவன்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து சிறந்த படைப்புகளையும் நடிகராக சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருபவர் இயக்குனர் செல்வராகவன். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7 ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த செல்வராகவன் தற்போது நடிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் சில கருத்துக்களை பகிர்ந்து வருவார். சோனியா அகர்வாலுடன் ஏற்பட்ட பிரிதலுக்கு பின் தனக்கு உதவியாளராக இருந்த பெண்ணை கரம்பிடித்தார் செல்வராகவன்.
அந்தவகையில், தன்னுடைய இரண்டாம் மனைவி கீதாஞ்சலி பற்றி பதிவிட்ட ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் குண்டாகத்தான் அவர் இருந்தார். ஆனால், எப்போது நீ இப்படியே இரு, மாற வேண்டாம் என்று 100 முறை கூறினேன்.
அதையும் மீறி உடல் எடையை குறைத்துவிட்டார் கீதாஞ்சலி. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது என்று செல்வராகவன் அந்த பதிவில் பகிர்ந்திருக்கிறார்.
