அந்த மாதிரி காட்சிகளுக்கு மட்டும் வாய்ப்பு வருது! புலம்பி தள்ளும் நடிகை..
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையில் அறிமுகமாகும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அதிலும் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலில் நடித்தும் பிரபலமாகி விடுகிறார்கள். அந்தவரிசையில் இருக்கும் நடிகை தான் சீரியலில் கிடைத்த நல்ல பெயரோடு சின்னத்திரைக்கு அறிமுகமாகி நடித்து வந்தார்.
சிறு கதாபாத்திரத்தில் நடித்த அம்மணி ஆசை அதிகமாக நடிகருடன் நெருக்கமாக நடிக்க ஒப்புக்கொண்டு நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து சீரியலில் அடக்கவுடக்கமான பெண்ணாக காமித்த நடிகை போகபோக தாராளமும் காட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் நடிகைக்கு அந்தமாதிரி காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே வந்துள்ளதாம். ஆனால் அம்மணி அதற்கு பயந்து வேண்டாம் என ஒதுக்கிவிட்டாராம்.
போகிற போக்கைப் பார்த்தால் அப்படி தான் நடிக்க வேண்டுமோ என தோழிகளிடம் புலம்பியுள்ளார். இப்போது தான் சினிமா உலகத்தை பற்றி புரிந்து கொள்கிறாயா என்று வெள்ளித்திரை நடிகைகள் அவரை பார்த்து நமட்டு சிரிப்பை காட்டியுள்ளார்களாம்.