TRP-க்காக இப்படியா பண்ணுறது.. கார்த்திகை தீபன் சீரியலை ட்ரோல் மெட்டீரியலாக்கும் நெட்டிசன்கள்..
கார்த்திகை தீபம்
சின்னத்திரையில் சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல் கார்த்திகை தீபம். கார்த்திக் ராஜா லீட் ரோலில் நடித்து வரும் இந்த சீரியலில், திபா சில வாரங்களுக்கு முன் தொலைந்து போக அவரை தேடி கார்த்திக், தீபா போலவே இருக்கும் கீதாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.
இதனிடையே தீபா எழுதி வைத்த டைரியை கீதா படிப்பது போன்ற காட்சி நடந்தது. தற்போது இந்த காட்சிகள் தான் ட்ரோல் மெட்டீரியலாக இணையத்தில் மாறியிருக்கிறது.
அதாவது ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் தீபாவை பாம்பு கடிக்க, ரெசாட் மருத்துவர் விஷயமில்லாத பாம்புதான் என்று கூறி தூங்காமல் பார்த்துக்கொள்ள கார்த்திகிடம் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து தீபா கார்த்தி இருவரும் வெளியில் சென்று ஆட்டம் பாட்டம் என இருக்கிறார்கள். அடுத்த நாள் ஷுட்டிங்கில் போலி துக்காக்கிக்கு பதில் ரியல் துப்பாக்கியை மாறியது தெரியாமல் கார்த்திக் ஷூட்டிங் செய்து கொண்டிருக்க, இதனை அறிந்த தீபா கடைசி நேரத்தில் டைரக்டரிடம் எடுத்து கூற உண்மை துப்பாக்கியை எடுத்துவிடுகிறார்.
இதன்பின்
தீபாவின் காதல் குறித்து டைரியை படித்து
அறியும் கீதா, தீபா திரும்ப வரணும், கார்த்திக்
மேல் எவ்வளவு காதலோடு இருக்காங்க என்று
வேண்டி கொள்கிறாள். தற்போது இதை பார்த்த
நெட்டிசன்கள் டி ஆர் பிக்காக இப்படி கார்த்திக் -
தீபா காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்த்ததை
ட்ரோல் செய்து வருகிறார்கள்.