நான் செத்தா அப்படி சாகனும்!! ஷாருக்கானின் பேச்சால் அதிர்ச்சியில் பாலிவுட் ரசிகர்கள்..
ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க சுமார் 250 கோடிகள் சம்பளமாக பெறும் ஷாருக்கான் பல ஆயிரக்கணக்கில் சொத்துக்களை வைத்திருந்து டாப் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார்.
அவர் நடித்த ஜவான், டாங்கி அசாட்டாக ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது. இந்நிலையில் ஷாருக்கான் ஒரு நிகழ்ச்சியில் சொன்ன ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
சாகும் நாள்
1990ல் இருந்து நடித்து வரும் ஷாருக்கானுக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதனையடித்து லாகார்னோ யூடியூப் தளத்திற்கு பேட்டியளிட்த்ஹ ஷாருக்கான், சாகும் நாள் வரை நான் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
படப்பிடிப்புத் தளத்திலேயே என் உயிர் போகவேண்டும், ஒருவர் ஆக்ஷன் எனக் கூற வேண்டும். நடித்துக்கொண்டு இருக்கும் போதே நான் இறக்க வேண்டும், கட் சொல்லும்போது நான் எழுந்திருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
ஷாருக்கானின் இந்த பேச்சு இணையத்தில் பரவி டிரெண்டாகிய நிலையில் பலரும் எமோஷனலான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.