மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என்னிடம் அசிங்கமாக நடந்தனர்!! வெளிப்படையாக பேசிய நடிகை..

Shakeela Gossip Today Indian Actress Tamil Actress
By Edward Aug 31, 2024 04:15 PM GMT
Report

மலையாள சினிமாவில் நடந்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து பல நடிகைகள் ஓப்பனாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் நடிகை ஷகீலா மலையாள சினிமாவில் நடந்த பல அசிங்கத்தை வெளிப்படையாக பேசி வருகிறார்.

மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என்னிடம் அசிங்கமாக நடந்தனர்!! வெளிப்படையாக பேசிய நடிகை.. | Shakeela Interview About Mollywood Cinema

மலையாள சினிமாவில் மட்டும் அட்ஜெஸ்ட்மெண்ட் நடக்கவில்லை, தமிழ் சினிமாவிலும் நடக்கிறது. அதைவிட தெலுங்கு சினிமாவில் நடக்கிறது. அந்த அறிக்கையில் குடித்துவிட்டு கதவை தட்டுவார்கள் என்று கூறியிருப்பது உண்மைதான். ஒரு படத்தில் நான் நடிக்கும் போது நடிகை ரூபஸ்ரீ கதாநாயகியாக நடித்திருந்தார்.

அப்போது நைட் அந்த நடிகையின் ரூம் கதவை 4 பேர் குடித்துவிட்டு தட்டி ரகளை செய்தார்கள். அதை பார்த்து நான் அவர்களை தட்டிக்கேட்டேன். பாலியல் ரீதியான பிரச்சனையை மலையாள சினிமாவில் சந்தித்த முதல் நபர் நான் தான்.

மேக்கப் மேன், காஸ்டியூம் டிசைனர் என்னிடம் அசிங்கமாக நடந்தனர்!! வெளிப்படையாக பேசிய நடிகை.. | Shakeela Interview About Mollywood Cinema

முதல் படத்திற்கு எனக்கு மேக்கப் போட்ட ஒருவர் நான் பிகினி அணிந்து இருந்தபோது எங்கே எல்லாம் தொட்டார் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். கோல்மால் என்ற படத்தில் காஸ்டியூம் டிசைனர் என் வீட்டிற்கு வந்து அளவு எடுத்து அசிங்கமாக என்னிடம் நடந்துகொண்டதாகவும் ஷகீலா தெரிவித்துள்ளார்.