கதையை திருடினேனா! விக்ரம் பட தயாரிப்பாளரால் அடுத்தடுத்த சிக்கலில் இயக்குநர் சங்கர்!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்று கோடிகணக்கில் வசூலை வாறி வழங்கி வருபவர் இயக்குநர் சங்கர். அவர் இயக்கி வெளியாகும் படம் உலகளவில் டிரெண்டிங்கில் இருக்கும். அப்படியாக நடிகர் விக்ரம், சதா நடிப்பில் 2005ல் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் அந்நியன்.
அப்படத்தினை தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரித்து வந்தார். தற்போது இயக்குநர் சங்கர் அந்நியன் படத்தினை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் நடிகர் ரன்வீர் சிங், கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அந்நியன் படம் என்னுடையது என்றும் அதற்கான உரிமை தன்னிடம் உள்ளது என்று தனது அனுமதி இல்லாமல் அப்படத்தை ரீமேக் செய்யமுடியாது என்றும் ஆஸ்கார் ரவிசந்திரன் கூறியுள்ளார்.
அதற்கு இயக்குநர் சங்கர், அந்நியன் கதை என்னுடையது. படத்தை ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் நான் கேட்க தேவையில்லை என்று பதிலளித்துள்ளார்.
இதைதொடர்ந்து ஆஸ்கார் ரவிச்சந்திரனும் அப்படத்தினை பாலிவுட் நடிகர் நடிகைகளை வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் தற்போது அறிவுத்துள்ளார்.