வழக்கத்திற்கு மாறாக ஷங்கர் மகள் திருமணத்தில் ரஜினிகாந்த் செய்த செயல்!! அதுதான் மரியாதையாம்..
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் என்ற மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி ரிலீஸ் செய்யவிருக்கிறார். இதற்கிடையில் தன் இரு மகள்களின் வாழ்க்கையை பற்றிய யோசித்து சில விசயங்களை செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ரோஹித் என்ற கிரிக்கெட் பயிற்சியாளருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணமான சில மாதத்தில் ரோஹித் பாலியல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
அதன்பின் ஐஸ்வர்யா அப்பா வீட்டில் இருந்து வந்த நிலையில், ரோஹித்தை விவாகரத்து செய்தார். அதன்பின் இரு ஆண்டுகள் கழித்து தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் ரஜினி, கமல், சிரஞ்சீவி, ராம் சரண், நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினிகாந்த் பற்றிய ஒரு தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த திருமண விழாவிற்கு சென்றாலும் சரி மணமக்களை வாழ்த்திவிட்டு அப்படியே கிளம்பிவிடுவாராம். ஆனால், ஷங்கர் மகள் ஐஸ்வர்யா - தருண் கார்த்திகேயன் திருமணத்தில் மட்டும் அதை செய்யவில்லையாம். தம்பதியை வாழ்த்திய ரஜினிகாந்த், ஷங்கர் வீட்டு திருமணத்தில் உணவு சாப்பிட்டு சென்றிருக்கிறாராம்.
இதுவரை யார் வீட்டு திருமணத்திலும் சாப்பிடாத ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் சாப்பிடுமாறு கெஞ்சி சாப்பிட வைத்திருக்கிறாராம். அதேபோல், இயக்குனர் ஷங்கருக்கும், யார் வீட்டு திருமணத்திற்கு சென்றாலும் சாப்பிட்டுவிட்டு செல்வது பழக்கமாம். அதன் நாம் செய்யும் மரியாதை என்பதால் அதை தவறவிடமாட்டாராம். அதனால் தான் ரஜினிகாந்தை, இயக்குனர் ஷங்கர் கண்டிப்பாக சாப்பிட்டு போக வேண்டும் என்று கூறியதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்கள்.