யாரும் தப்பா நினைச்சாலும் பரவாயில்ல!!எனக்கு ஆதி செய்த செயல்!! சின்னப்பொண்ணு எமோஷ்னல்..
சின்னப்பொண்ணு
தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞராக இருந்து பாடகியாக பல பாடல்களில் பாடி வரும் சின்னப்பொண்ணு, தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியொன்றில், ஒருமுறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பியபோது பெரிய கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படி வெளியே வந்தது, விபத்து குறித்து கனிமொழி அக்கரையோடு பார்த்துக்கொண்டது வரை பகிர்ந்திருந்தார்.
ஆதி
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஆதி என் பேரை கான்சர்ட்டில் சொன்னாலே போதும், சூப்பராக இருக்கும். இவங்க வேணும்னு எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்காரு ஆதி. பிக்பாஸுக்கு சென்றபோது வீரன் பாட்டை பாட நான் எப்போது வருவேன்னு ஆதியும் இயக்குநரும் கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்.
ஒருக்கட்டத்தில் அவங்களை வெளியில விடுறீங்களான்னு சொல்ற அளவுக்கு பேசுனாங்களாம். அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு 30 நாட்களுக்கு பின் வந்ததும், சின்னப்பொண்ணு அக்கா வந்துட்டாங்களான்னு சொன்னாங்களாம்.
உண்மையில் சொல்கிறேன், யாரும் தப்பா நினைச்சாலும் பராவாயில்லை. எத்தனையோ மியூசிக் டைரக்டர்களுடன் பாடி இருக்கேன். நடிச்சு இருக்கேன். இதுபோல் ஒரு மியூசிக் டைரக்டரை நான் பார்த்ததில்லை என்று சின்னப்பொண்ணு தெரிவித்துள்ளார்.