ஒரு வேலை சாப்பாடு..முதல் சம்பளம் இவ்வளவு வாங்கினேன்..ஆனா!! பாடகி கெனிஷா ஓபன் டாக்...
பாடகி கெனிஷா
கோலிவுட் சினிமாவில் தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் நடிகர் பெயராக இருப்பது ரவி மோகன். மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போகிறேன் என்ற அறிக்கை வெளியிட்டது முதல் தற்போது வரை அவரின் விஷயங்கள் இணையத்தில் விவாதபொருளாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷின் மகள் திருமணத்தின் போது, தன்னுடைய கிசுகிசுக்கப்படும் கெனிஷாவுடன் ஜோடியாக கைக்கோர்த்தபடி ரவி மோகன் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆர்த்தி, விவாகரத்து வழக்கில் மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்ற கோரிக்கையை கேட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பின் கெனிஷா முதன்முதலாக அளித்த பேட்டியொன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு வேலை சாப்பாடு
அதில், என் அம்மா, அப்பா இறந்தப்பின் நிறைய கஷ்டப்பட்டேன். 4 வருடங்களுக்கு பின் அதிலிருந்து மீண்டு வந்தேன். ஒரு நாளைக்கு 4 வேலை செய்வேன். பெங்களூரூவில் ஒரு காஃபி சாப்பில் தான் 500 ரூபாய் சம்பளத்தில் என் கேரியர் ஆரம்பித்தேன்.
அப்போது 500 ரூபாய் சம்பளம் என்றாலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே வாங்குகிறேன், எவ்வளவு என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அப்பா அம்மா இல்லாத சமயத்தில், ஒரு வேலை மட்டுமே சாப்பிடும் நிலைமை ஏற்பட்டது என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.