பர்த்டே பார்ட்டியில் கஞ்சா!! வசமாக சிக்கிய பாடகி மங்கிலி விளக்கம்..
பாடகி மங்கிலி
தெலுங்கு சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய ரசிகர்களின் மனதை தன் குரல் வளத்தால் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் பாடகி மங்கிலி. புஷ்பா, ஜவான் உள்ளிட்ட மிகப்பெரிய படங்களில் பாடிய மங்கிலி, ஊ அண்டாவா மாவா கன்னட வெர்ஷனை பாடி இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்கான தன் நண்கர்கள் உள்ளிட்ட பலருக்கு பார்ட்டி கொடுக்க ஹைதராபாத் சேவல்லா பகுதியில் இருக்கும் திரிபுரா ரிசார்ட்டை புக் செய்திருக்கிறார் மங்கிலி.
பர்த்டே பார்ட்டி
ஜூன் 10 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று இரவு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கூச்சலுடன் டிஜே கச்சேரி களைக்கட்டியது. அங்கு வந்தவர்களுக்கு மதுவகைகள் கொடுக்கப்பட்டது. அதோடு, பார்ட்டியில் பயன்படுத்துவதற்கு வரவழைக்கப்பட்ட உயர் ரக கஞ்சா பொட்டலங்கள், பார்ட்டியில் தாராளமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா போதையில் அவர்கள் போட்ட ஆட்டம் அருகில் இருந்த சேவல்லா காவல் நிலையம் வரை தகவல் பரவியது. இதனைதொடர்ந்து போலிசார் ரிசார்ட்டுக்கு வந்து சோதனை நடத்தியதில், பாடகி மங்கிலி, அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். ஆனால் எங்கள் கடமையை செய்யவிடுங்கள் என்று கூறியதால் மங்கிலி ஒதுங்கினார்.
கஞ்சா போதை
பின் அனுமதி இல்லாமல் பார்ட்டி நடத்தியது, வெளிநாட்டு மதுவகைகளை விருந்தினருக்கு சப்ளை செய்தது, சிலர் கஞ்சா போதையில் போலிசார் முன்னிலையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பிடித்து மருத்துவ சோதனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை செய்த பாடகி மங்கிலி மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
பார்ட்டியில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நடத்தப்பட மருத்துவ பரிசோதனையில் பலருக்கு பாசிட்டிங் ரிப்போர்ட் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விளக்கம்
ஆனால் பிறந்தநாள் பார்ட்டியில் வழக்கமான கொண்டாட்டங்களே நடந்தது. சிலர் மது அருந்தியிருக்கலாம், ஆனால் போதைப்பொருட்கள் வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறி வெளியாகும் தகவல்கள் எல்லாம் பொய். நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், தாய் சகோதரர்கள் ஊள்ளிட்டவர்கள் தான் இருந்தார்கள், அதற்கு அனுமதி பெற வேண்டும் என்று எனக்கு தெரியாது என்று பாடகி மங்கிலி தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா பாடலை மங்கிலி தெலுங்கு வெர்ஷனில் பாடி இருக்கிறார்.