பயில்வான் ஒரு மாமா பையன், உதவாக்கரை!! கண்டபடி பேசிய பாடகி சுசித்ரா..
சினிமாத்துறையில் இருக்கும் நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசி வருகிறார். சமீபத்தில் கூட ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி விவகாரத்தை பற்றி பேசியிருந்தார். இதனை தொடர்ந்து பல பேட்டிகளில் பல விஷங்களை பகிர்ந்து வரும் பாடகி சுசித்ரா, பயில்வான் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.
என்னை பற்றி பயில்வான் பேச இரு காரணங்கள் இருக்கிறது. அவர் காசு வாங்கி இருக்கனும் இல்லைன்னா என்னை பற்றி தெரிந்து இருக்கணும். நான் என் வாழ்நாளில் அவரை பார்த்தது கூட இல்லை என்றும் நான் பாடகியாக இருக்கும் போது அவர் சினிமாவில் இருந்திருக்கிறார். நான் திரைத்துறைக்கு வரும் முன் ஆபாச பட ஏஜெண்ட்டாக பயில்வான் இருந்தார்.
அப்போது மலையாள படங்கள் சென்னையில் எடுப்பார்கள், அதுல அவர் வேலை பார்த்தார். ஆபாச பட கலாச்சாரத்தை இங்கே கொண்டு வந்ததே அவர் தான். வனிதா அதற்கு வாடகை கொடுத்ததால் தான் அவரை பற்றி நெகட்டிவ்-ஆக பேசாமல் பாசிட்டிவ்-ஆக பயில்வான் பேசி வருகிறார் என்று சுசித்ரா கூறியிருக்கிறார்.
அவரை சரத்குமார், ராதாரவி, சத்யராஜ், கங்கை அமரன் போன்றவர்கள் சொல்லித்தான் அதை தடுத்துநிறுத்தினார்கள். பயில்வான் ஒரு மாமா பையன், உதவாக்கரை, பத்திரிக்கையாளரே இல்லை, விஷால் கூட அவரிடம் பேச விரும்பவில்லை, அவர் ஒதுக்கப்பட்டவர் என்று பொங்கி பேசியிருக்கிறார் பாடகி சுசித்ரா.