நடுத்தெருவுக்கு வந்த தயாரிப்பாளர்! நஷ்டத்திற்கு ஈடுகொடுத்த சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து 100 கோடி வசூல் சாதனையாளராக அவதாரம் எடுத்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்து மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகினார்.
சமீபத்தில் டாக்டர் படத்தின் மூலம் 100 கோடி வசூலை பெற்று சம்பளத்தை பல மடங்கு ஏற்றியுள்ளார். இந்த இடத்திற்கு சிவகார்த்திகேயன் வர காரணமாக இருந்தவர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ப்ரொடக்ஷன் தான்.
மதன் தயாரிப்பில் மூன்று படங்களில் நடித்த சிவகார்த்திகேயனால் ஓரளவிற்கு வெற்றியை கண்டார். இதன்பின் சில படங்களாக் நஷ்டத்தில் நடுத்தெருவிற்கும் வரும் அளவிற்கு கடனில் அவதியுள்ளார். இதையறிந்த சிவகார்த்திகேயன் நான் உதவுகிறேன் கடனை அடைத்துவிட்டு வாருங்கள் படம் பண்ணுவோம் என்று கூறியுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை, மான்கராத்தே போன்ற படங்கள் தான் என்னுடைய அடையாளம் என்று அதன் தயாரிப்பாளருக்கு உதவி செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.